போக்குவரத்து சபை சாரதி மீது தாக்குதல்!
Saturday, August 26th, 2017வட்க்கோடுட்டையில் இலங்கை போக்குவரத்து சபை சாரதி ஒருவர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.
வட்டுக்கோட்டை பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் கூர்மையான ஆயுதத்தால் குறித்த சாரதியை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
28 வயதான தேவேந்திரன் லோகேந்திரன் என்ற வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரைநகர் போக்குவரத்து சபையில் சேவை செய்யும் குறித்த சாரதி தனது கடமையை நிறைவு செய்து விட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிரக்கம் போதே தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
Related posts:
2000 கிராம சேவையாளர்களுக்கு வெற்றிடம்!
இனிவருங் காலங்களில் நாட்டில் ஹைபிரிட் லொக் – டவுன் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வ...
பயணத்தடையை மீறியோருக்கு சட்ட நடவடிக்கை – கோப்பாய் பொலிசார் நடவடிக்கை!
|
|