பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி!

Thursday, May 27th, 2021

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி வீதியில் பயணிப்போரை  கண்காணிப்பதற்காக, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் பெண் போலீசாரையும் உள்ளடக்கிய போலீஸ் மோட்டார் சைக்கிள் அணி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

யாழ்ப்பாண குடாநாட்டின் முக்கிய வீதிகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் போலீஸ் மோட்டார் சைக்கிள் அணி பயணிப்போரை வழிமறித்து சோதனையில் ஈடுபடுவதோடு அத்தியாவசிய சேவை தவிர்ந்து பயணிப்போர் எச்சரிக்கை செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

5000 ரூபா கொடுப்பனவு கூட வழங்கப்படவில்லை: தனியார் பேருந்து ஊழியர்கள் நிலை மிக மோசமாக மாறுகின்றது - ய...
தடுப்பூசி செலுத்திக்கொள்ள இளைஞர்கள் தயக்கம் - அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எ...
மக்கள் விடுதலை முன்னணி போன்ற குழுக்களுக்கு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்...