பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு மற்றுமொரு இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை – விவசாய அமைச்சு அறிவிப்பு!.

எதிர்வரும் பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு மற்றுமொரு இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும் அதற்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடுத்த பெரும் போகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் உரங்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களுக்கு பதிலாக விவசாயிகளின் கணக்குகளுக்கு பணத்தை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, பொது மக்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ப இரசாயன உரங்கள் அல்லது கரிம உரங்களை தனியார் அல்லது அரச உரக் கூட்டுத்தாபனத்தில் கொள்வனவு செய்யலாம் என மஹிந்த அமரவீர தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
உலக தற்கொலை தவிர்ப்பு தினம் இன்று!
யாழ், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இன்று மின்தடை
ஐ.நாவில் இம்முறை சாதகமான முடிவுகிட்டும் - வெளிவிவகார அமைச்சர் பீரிஷ் நம்பிக்கை!
|
|