போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுடன் தொடர்புடைய பொலிசார் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அறிவிப்பு!
Monday, April 22nd, 2024போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் கடுமையான சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யுக்திய நடவடிக்கையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அடுத்த மாதத்திற்குள் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் புத்தளம் மாவட்டத்தில் அதற்கான விசேட இடம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பிறப்புச் சான்றிதழில் பேதம் வேண்டாம் - அமைச்சர் வஜிர அபேவர்தன!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது எமக்கு பூரண நம்பிக்கை - கூட்டமைப்பு எம்.பி சித்தார்த்தன் கருத்து!
நாட்டில் நுரையீரல் தொடர்பாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மரணிப்பதற்கான அதிர்ச்சி காரணமும் ...
|
|