உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன – உணவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, April 19th, 2020

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக உணவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜே.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரிசி, பருப்பு, ரின் மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, லங்கா சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஆகியவற்றினூடாக உணவுப் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களூடாக நிவாரண விலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts:


யாழ். புத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக தனக்குத் தானே தீமூட்டிய இளம் குடும்பப் பெண் ஐந்து  நாட்களி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி ஏற்று இன்றுடன் ஒருவருடம் நிறைவு – நாட்டு மக்களுக்கு விஷேட உரை!
போதைப்பபொருள் பாவனையிலிருந்து மக்களை மீட்டி அனைத்து தரப்பினரும் இணைந்த ஒரு வழிமுறையை கொண்டிருக்க வேண...