பெரும் போகத்திற்கு தேவையான சேதனப் பசளை விநியோகத்திற்கு விசேட திட்டம் – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!
Thursday, June 10th, 2021
எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான சேதனப்பசளையை போதிய அளவில் விநியோகத்திற்கென விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் நூற்றுக்கு நூறு வீதம் சிறந்த தேசிய உணவு உற்பத்திகளை பெருக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நச்சுத் தன்மையற்ற உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இது அமைந்துள்ளது என்றும் விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் சேதனப் பசளை உற்பத்தியை உள்நாட்டில் பெருக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா தொற்று பரவ வாய்ப்பு: தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது – கபே அ...
வளமான கிராமம் திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்திற்கு 2 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - பிரதமர் மஹிந்...
கட்சித் தாவல் ஊடாக எந்த அரசியல் கட்சிகளையும் பலப்படுத்த முடியாது - நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத...
|
|
|


