கட்சித் தாவல் ஊடாக எந்த அரசியல் கட்சிகளையும் பலப்படுத்த முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் சுட்டிக்காட்டு!
Thursday, April 11th, 2024கட்சித் தாவல்களின் ஊடாக எந்த அரசியல் கட்சிகளையும் பலப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டமே இந்த நாட்டிற்கு தற்போது அவசியமாகின்றது.
இதேநேரம் அரச செலவீனத்தை முகாமைத்துவம் செய்வதற்கான நுட்பமே நமக்கு தேவைப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக கூறி தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களையே நடைமுறைப்படுத்துகின்றது.
இதனூடாக கடன் செலுத்தும் நடவடிக்கையை மாத்திரம் மேற்கொள்ளவுள்ளனர் எனவும் சரித்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு!
கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 42 பேர் உட்பட வடக்கில் 50 தொற்றாளர்கள் நேற்று அடையாளம்!
எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் - பொது சுகாதார ஆய்வாளர்கள் ...
|
|