பெருந்தோட்ட நிறுவனங்கள் அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ள காணிகளை சட்டரீதியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறைசார் மேற்பார்வைக் குழு, பரிந்துரை!

Thursday, July 18th, 2024

பெருந்தோட்ட நிறுவனங்கள் அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ள காணிகளை சட்டரீதியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளது.

அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் அல்லது மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை என்பவற்றுக்கு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒதுக்கப்படாத காணிகள் பெருந்தோட்ட நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகக் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, குறித்த மேற்பார்வை குழுவுக்கு அறிவித்துள்ளது.

அதற்கமைய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படாத, நிறுவனங்களால் பலவந்தமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை உடனடியாக மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, அந்தக் குழுவின் தலைவர், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

நாட்டில் மூன்று  இலட்சம் டொலர்களை வைப்பிலிடும்  வெளிநாட்டவருக்கு  10 வருட கால வதிவிட வீசா ! 
யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளது - செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத...
வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகள் தொடர்பில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை – யாழில் இராஜாங்க அமைச்சர் அ...