கோத்தபாய தொடர்பில் ஜோதிடர் வெளியிட்ட தகவல்கள்!

Sunday, September 15th, 2019


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ பெரும்பான்மை சிங்களவர்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என, பிரபல இந்திய ஜோதிடர் ஒருவர் ஆரூடம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த இந்திய பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோதியின் வெற்றி உட்பட பல விடயங்களை சரியாக கணித்து கூறிய, பிரபல ஜோதிடர் சுனில் வர்ஸ்னாய், கோத்தபாயவின் வெற்றி குறித்து தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படும். அந்த தேர்தலில் தகுதியற்ற அனைவரையும் வெளியேற்றி விட்டு, தனக்கு தகுதியானர்களை மாத்திரம் தேர்தலில் போட்டியிட கோத்தபாய அனுமதி வழங்கவுள்ளார்.

பொதுத் தேர்தலின் பின்னர் 30 பேர் கொண்ட அமைச்சரவை நியமிப்பார். அதன் பின்னர் மஹிந்தவை பிரதமராக நியமிப்பார். இரத்த உறவான மஹிந்தவை அதிகம் நம்பும் கோத்தபாய, நாட்டின் பாதுகாப்பு உட்பட முக்கிய பதவிகளை அவரிடம் வழங்குவார்.

அவரின் ஆட்சிக்காலத்தில் மத்திய வங்கி மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளார். சமகால அரசாங்கத்திலுள்ள பலருக்கு 10 வருட சிறைத்தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளார்.

அதன் பின்னர் நாட்டின் அபிவிருத்திக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கோத்தபாய மேற்கொள்ளவுள்ளார் என ஜோதிடர் சுனில் வர்ஸ்னாய் தெரிவித்ததாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Related posts: