புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 06 இற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான மேன்முறையீடுகள் நாளைமுதல் ஏற்றுக்கொள்ளப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, February 12th, 2024

2023 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடசாலைகளை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 06 இற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான மேன்முறையீடுகள் நாளைமுதல் ஏற்றுக்கொள்ளப்படும்.

2024 பெப்ரவரி 13 முதல் 29 வரை ஒன்லைன் முறை மூலம் மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஊடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மூலம் அதிகபட்சமாக மூன்று பாடசாலைகளுக்கு மேல்முறையீடு செய்யலாம்.

http://g6application.moe.gov.lk/#/ என்ற இணையத்தளத்தின் ஊடாக நேரடியாக முறையீடுகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

000

Related posts:

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களிற்கு வீடுகள் : அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் த...
ஆகஸ்ட் மாதம்முதல் இருந்து மின்சார கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பு - பொதுப் பயன்பாட்டு ஆணைக்க...
யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள்விமானப்படையில் இணைய முன்வரவேண்டும் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிர...