புத்தாண்டு பாடல் திரிபுபடுத்தப்பட்டிருப்பது குறித்து விசாரணை – கலாசார அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை!
Sunday, April 14th, 2024தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புத்தாண்டு பாடல் திரிபுபடுத்தப்பட்டிருப்பது குறித்து கலாசார அலுவல்கள் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் ஆலோசனையின் பேரில் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரோஹன பெத்தகே பாடிய புத்தாண்டு பாடலே இவ்வாறு திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குறித்த பாடலை திரிபுபடுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அரச மற்றும் தனியார் துறையினருக்கு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவித்தல்!
நீருக்கு மேலான சுற்றுலா வீடுகள் மற்றும் சுற்றுலா விடுதிகளுடன் கூடிய 50 அதிசொகுசு சுற்றுலா விடுதிகளை ...
ஸ்ரீலங்கன் விமான சேவை, 2024 ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய உத்தரவாதப் பத்திரத்திற்கான வட்டித் தொகையை செலு...
|
|