மின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!
Wednesday, September 18th, 2019மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று (18) அழைக்கப்பட்டுள்ளார்.
மின்சார சபைக்கு மேலதிகமாக மின்சாரத்தைக் கொள்வனவு செய்தமை மற்றும் எரிபொருள் கொள்வனவு தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலான சாட்சிகளைப் பதிவுசெய்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி செயலணியின் கொள்கைவகுப்பு மேன்முறையீட்டு சபையின் தலைவர் K.A. சோமசிறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மின்சாரக் கொள்வனவின்போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலான சாட்சியங்களைப் பதிவுசெய்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
Related posts:
புதிய அமைச்சரவை இன்று கூடுகிறது!
இன்றுமுதல் விசேட போக்குவரத்து சேவை முன்னெடுப்பு - இலங்கை போக்குவரத்து சபை!
அரச பணியாளர்களுக்கு இன்று விசேட விடுமுறை - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் வழமைபோன...
|
|