பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பதவியிலிருந்து நீக்கம்!
Thursday, October 18th, 2018பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவினை பதவியில் இருந்து இடைநிறுத்துமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
அதற்கான சுற்றுவட்டம் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்னவின் கையொப்பத்துடன் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவுறும் வரையில் அவரை பதவி இடைநிறுத்தம் செய்ய அமைச்சு தீர்மானித்துள்ளது.
Related posts:
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை - சுகாதார சேவைகள் பணிப்...
சுகயீனமடைந்த பிள்ளைகளை கால தாமதமின்றி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுங்கள் - கொழும்பு ரிட்ஜ்வே சிறுவ...
சீனி விலையை கட்டுப்படுத்த விரையில் தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!
|
|