பிரதான நகரங்களில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுங்கள் – சாரதிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்து!
Tuesday, April 11th, 2023
தமிழ் சிங்கள புதுவருட பண்டிகை காலத்தில் பிரதான நகரங்களில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக பிரதான நகரங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமையினால் அதனை நிவர்த்திப்பதற்காக இந்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
விதிமுறைகளை மீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டமையினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மின்விளக்கு சமிக்ஞைகள் மூலம் 600 மில்லியன் மோசடி - புகையிரத ஊழியர்கள் புகார்!
பருத்தித்துறையில் மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது!
நட்டத்தில் இயங்கிய இ.போ.ச. கடந்த வருடம் 2,000 மில்லியன் இலாபம் ஈட்டியுள்ளது - இராஜாங்க அமைச்சர் தில...
|
|
|
இன்றுமுதல் சேவைகள் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டிருந்தும் தபால் சேவைகள் முமுமையாக இடம்பெறவில...
எதிர்வரும் புதனன்று பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் ஆராய்வு – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!
2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால ...


