பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுற்றறிக்கைக்குள் வரையறைப்படாது உதவிகளைக் கிடைக்கச் செய்யுமாறு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன வேண்டுகோள்
Saturday, May 27th, 2017மழைமற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுற்றறிக்கைக்குள் வரையறைப்படாது சகலருக்கும் உதவிகளைக் கிடைக்கச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் பலபாகங்களிலும் தொடர்ச்சியாகபெய்துவரும் கடும் மழைகாரணமாக ஏற்பட்டுள்ளவெள்ளப் பெருக்கு மற்றும்மண்சரிவு போன்றஅசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்டமக்கள் தற்போதுநலன்புரிநிலையங்கள்;,பாடசாலைகள்,வணக்கஸ்தலங்கள்,உறவினர் வீடுகளிலும் தற்காலிகமாகதங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறுதங்கவைக்கப்பட்டுள்ளமக்களுக்குசுற்றறிக்கைக்குள் வரையறைப்படாதுசகலருக்கும் உதவிகளைக் கிடைக்கச் செய்யுமாறு அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனஇலங்கையின் துறைசார்ந்தஅதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீரற்றகால நிலைதொடரும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் படைத்தரப்பினர் தொடர்ச்சியாகஈடுபட்டுவருகின்றனர்.
சீரற்றகாலநிலைகாரணமாக இதுவரையில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லையென்றும்,அவர்களைத் தேடும் பணிகள் தொடர்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|