வெளிநாட்டிலிருந்து வரும் பொதிகள் பரிசோதிக்கப்படும் – தபால் திணைக்களம்!
Monday, January 16th, 2017வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்படும் பொதிகள் அனைத்தையும் பரிசோதனை செய்வதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, இரண்டு புதிய ஸ்கான் இயந்திரங்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி மத்திய தபால் பரிமாற்றகத்தில் காணப்பட்ட பொதி ஒன்றிலிருந்து 100 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மற்றும் ஹஷிஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. கொழும்பு – கொம்பனித்தெரு பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பொதியிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன.
இதனை அடுத்து, மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு வரும் அனைத்துப் பொதிகளையும் சோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சாதாரண தர பரீட்சை அவசியமில்லை: அனைவரும் உயர்தரத்திற்கு அனுமதிக்கப்படுவர் : கல்வியமைச்சர்!
விபத்துக்கள் மூலம் மூளைச்சாவடைந்தோரின் சிறுநீரகங்களை பயன்படுத்த முடிவு!
ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்படும் - சுகாதார அமைச்சு!
|
|
சுவரொட்டிகளை அகற்ற 758 இலட்சம் ரூபா நிதி பொலிஸாருக்கு ஒதுக்கீடு - தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற...
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் அனைவரும் வேறு பல ஆபத்தான நோய்களாலும் பதிக்கப்பட்டிருந்தனர் – தொற்று நோயி...
தேசிய இணையப்பாதுகாப்பு சுட்டியில் இலங்கை முன்னேற்றம் - இலங்கை கணணி அவசர சேவைப்பிரிவு தெரிவிப்பு!