ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

Sunday, February 17th, 2019

இலங்கையில் ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள பிரதான தரப்பினர் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதற்கமைய அமைச்சரவை அமைச்சர்கள் 6 பேர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதகுருமார்கள், வர்த்தகர்கள், வங்கியாளர்கள், ஊடகவியலாளர்கள், நடிகைகள், நடிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கொக்கொய்ன் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.

சில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் போதைப்பொருள் அருந்திய பின்னரே நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 5 வருடங்களாக இலங்கையில் வியாபித்துள்ள இந்த ஆபத்து காரணமாக, பிரதான பதவிகளில் செயற்படும் பலர் இதற்கு அடிமையாகியுள்ளனர்.

பிரபல விமான நிறுவனங்களின் ஊழியர்கள் ஆரம்பத்திலேயே இந்த போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.சமகாலத்தில் இலங்கையில் கொக்கொய்ன் போதைப்பொருள் பாரியளவில் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் உயர் மட்டத்தில் இருந்து மத்திய தரம் வரையில் அனைவரும் ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கொக்கொய்ன் போதைப்பொருள் ஆபத்தானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடனம் செய்துள்ளார்.

போதைப்பொருளுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி தயாராகி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: