பாடசாலை விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பை விடுத்தது கல்வி அமைச்சு!
Monday, July 8th, 2024
நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் நடைபெற்றாலும் இன்று மற்றும் நாளை பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) மற்றும் நாளை (09) சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த தொழிற்சங்க போராட்டங்களில் ஆசிரியர்கள் இணைந்துகொண்டாலும் கல்வி நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
புதிய அரசியல் யாப்பில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு முக்கித்துவம் - அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி!
நீரிழிவு நோயாளர் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு – யாழ் போதனா வைத்தியசாலையின் துறைசார் வைத்திய ...
நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த ஐ.நா. சாசனத்தையும் இலங்கை ஆதரிக்கும் – ஜனா...
|
|
|


