பாடசாலை மாணவர்களின் தடுப்பூசி தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்படும் – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Monday, September 13th, 2021

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை எதிர்வரும் வியாழக்கிழமை பெற்றுக் கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடபெறவுள்ள கொவிட் -19 பணிக்குழுவில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான ஆய்வுக் குழுவுக்கு சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: