சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான சோதனைகளுக்கு வீதிகளில் தடை!

Monday, June 20th, 2016

வாகன சாரதி அனுமதிப்பத்திரத்துக்காக சாரதிகளுக்கு வழங்கப்படும் சோதனை நடவடிக்கைகள் இனிமேல் பிரதான வீதிகளில் இடம்பெறுவது தடை செய்யப்படவுள்ளதாக உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்காக பிலியந்தலை -வெரகெர மோட்டார் திணைக்களம் அமைந்துள்ள பகுதியில் 900 மில்லியன் ரூபாய் செலவில் பயிற்சி ஓடுபாதை ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒழுங்குமுறை திட்டத்தின் கீழ் இது அமைக்கப்படவுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் மாவட்டங்கள் மட்டத்தில் இந்த பயிற்சி ஓடு பாதை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச மட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த பயிற்சி ஓடு பாதை ஊடாக அனைத்து வீதிகளுக்குமான சட்டதிட்ட தொடர்பான சரியான அறிவுறுத்தல்கள் சாரதிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related posts: