பாடசாலைகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்பளிக்கப்பட மாட்டாது – வைத்தியர் சுசி பெரேரா உறுதி!

Friday, November 27th, 2020

பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் திருப்திகரமானவையாக உள்ளன. எனவே பாடசாலைகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதற்கான மூலம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகக் காணப்படுகிறது.

மே மாதத்திற்கு முன்னரே கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பன ஒன்றிணைந்து பல சுகாதார விதிமுறைகளை வெளியிட்டுள்ளோம்.

இலங்கையில் அண்மையில் இல்லாமல் 1918 ஆம் ஆண்டுமுதல் கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து செயற்படுகிறது. அப்போதிலிருந்து கல்விக்கான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. சுகாதாரத்துறைக்கு கல்வி இன்றி இயங்க முடியாது. அதே போன்று கல்விக்கும் சுகாதாரம் இன்றியமையாததாகும்.

எனவே பாடசாலைக்குள் கொத்தணி உருவாகுவதை பார்ப்பதற்கான தேவை எமக்கு கிடையாது. அவ்வாறு உருவாகக் கூடிய வாய்ப்புக்களும் மிகக் குறைவாகும். காரணம் பாடசாலைகளில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன..

எவ்வாறிருப்பினும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பெற்றோர் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சுகயீனம் அல்லது உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிள்ளைகள் இருப்பார்களாயின் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கல்வி நடவடிக்கைகளில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பது நாட்டில் அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

எனவே பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை நாட்டில் தற்போதுள்ள நிலையில் எடுக்கப்பட்ட நேர்மறையான தீர்மானமாகக் கருத வேண்டும். இதனை வெற்றிகரமாக கொண்டுசெல்ல அனைவரும் புதியதொரு வழமையான சூழலுக்கு பழக்கமடைய வேண்டும்.

அவ்வாறில்லை என்றால் அடுத்த வருடம் மாத்திரமின்றி இன்னுமொரு வருடமும் இவ்வாறே பயணிக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவித்த அவர்  பாடசாலைகளை திறப்பதற்கும் மூடுவதற்கும் வாய்ப்புக்கள் ஏற்படும். எனவே அனைத்திற்கும் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: