பஸ் கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!
Tuesday, May 22nd, 2018பஸ் கட்டணத்தை 12.5 வீதத்தால் அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாவிலிருந்து 12 ரூபாவாக அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து நூற்றுக்கு 6.56 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. எனினும் இந்த அதிகரிப்பைஏற்றுக் கொள்ளாத தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்த பேராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர்.
இதன் காரணமாக 12.5 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும் குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாவில் இருந்து 12 ரூபாவாக அதிகரிப்பதற்கும் போக்குவரத்து அமைச்சு இணக்கம்தெரிவித்திருந்தது.
அதன்படி குறித்த கட்டண திருத்தம் இன்று அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டதை அடுத்து அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Related posts:
மனித உடல்கள் சயிடம் நிறுவனத்துக்கு கிடைத்தது எவ்வாறு?
அரச தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் பதவியேற்பு!
முகநூல் கணக்குகளை அழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
|
|
போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கு மக்கள் ஆதரவு வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட்ட...
தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பை வழங்க தாம் தயங்கப் போவதில்லை – ஜனாதிபதி அறிவிப்பு - இலங்கைக்கு ...
அத்தியாவசியப் பொருட்களின் விலையை திருத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவ...