தொடரும் எரிபொருள் நெருக்கடி – ஜூலை 10 க்குப் பின்னரும் பாடசாலைகள் மூடப்படலாம் – கல்வி சாரா ஊழியர் சங்கம் எச்சரிக்கை!

Friday, July 1st, 2022

எரிபொருள் நெருக்கடி காரணமாக ஜூலை 10 ஆம் திகதிக்குப் பின்னரும் பாடசாலைகள் மூடப்படும் என கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களால் பாடசாலை மாணவர்களும் சிக்கியுள்ளதாக ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே. திலகரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை எனவும், எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை எரிபொருள் நாட்டுக்கு வராது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை மாதத்தில் பாடசாலைகள் மூடப்படலாம் என்றும், பொறுப்பாளர்களின் நடவடிக்கைகளால் கல்வி அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: