இலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இந்தியா தீர்மானம்!
Saturday, December 17th, 2016
இலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சத்திட தீர்மானித்துள்ளதாகவும் பஹாமஸ் தலைநகர் நாசோவில் நடந்த அனைத்துலக சிவில் விமான பேச்சுக்களின் போது இந்த ஒப்பந்தம் குறித்து தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒப்பந்தம் கைச்சாத்திடும் பட்சத்தில் இந்தியாவின் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய ஆறு விமான நிலையங்களுக்கு இலங்கையில் கட்டுப்பாடற்ற விமானப் பயணங்களை மேற்கொள்ள முடியும்.
இந்நிலையின் இந்தியா இவ்வாறான திறந்த வான் ஒப்பந்தத்தை இலங்கை உள்ளிட்ட ஜமைக்கா, கயானா, செக் குடியரசு, பின்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் கைச்சாத்திட உத்தேசித்துள்ளது.

Related posts:
அணித்தலைவர்களாக சந்திமால், தரங்க!
நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கப்படுமானால் விலைகுறைப்பை பயணிகளுக்கு வழங்க தயார் - இலங்கை தனியார் பேர...
கடுமையான வட்டி விகித உயர்வுகளுக்குப் பின்னர் உலக பொருளாதாரம் ஒரு மென்மையான இறக்கத்தை சந்திக்கும் - ச...
|
|
|


