யாழ்ப்பாணத்தில் உச்சம் பெறும் கொரோனா – ஒரே நாளில் 66 தொற்றுறுதி – மாகாண சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை!

Friday, May 21st, 2021

யாழ்.மாவட்டத்தில் 62 பேர் உட்பட வடக்கில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் 62 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 6 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை வைத்தியசாலையில் 3 பேருக்கும், பருத்துறை வைத்தியசாலையில் ஒருவருக்கும், சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒருவருக்கும், ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் ஒருவருக்கும், மானிப்பாய் வைத்தியசாலையில் ஒருவருக்கும், கோப்பாய் வைத்தியசாலையில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேருக்கும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், யாழ்.சிறைச்சாலையில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கு தொற்று. முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கும், செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.   

Related posts: