ஜப்பானின் உதவியுடன் சேதன பசனை தயாரிக்கும் தொழிற்சாலை வடமராட்சியில் – எதிர்வரும் ஞாயிரன்று அதிகாரபூரவமாக திறந்துவைப்பு!

Friday, June 25th, 2021

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் அடிப்படையில் நஞ்சற்ற உணவை உருவாக்கும் குறிக்கோளுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் சேதன பசளை பாவனை திட்டத்தின் ஒர் அங்கமாக வடமராட்சி முள்ளியில், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

ஜப்பான் நாட்டிலுள்ள ஜெய்க்கா நிறுவனத்தின் சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான நிதியுதவியின் மூலம் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்த தொழிற்சாலை ஊடாக திண்மக்கழிவுப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு, இந்த தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் குறித்த திட்டத்தை ஆரம்பித்தவைக்கும் வகையில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் அதிதிகளாக பங்கேற்கவுள்ளதுடன் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கையின் 9 மாகாணத்துக்கும் தலா ஒரு திட்டம் வழங்கப்பட்ட நிலையில் வட மாகாணத்துக்கான திட்டம் கரவெட்டி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு கரவெட்டி குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: