பரீட்சை மண்டபத்தில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொண்ட பிரச்சனை தொடர்பில் உரிய நடவடிக்கை – அமைச்சர் ராஜித சேனாரத்ன!
Thursday, December 8th, 2016கிழக்கு மாகாணத்தில் முள்ளிப்பொத்தானையில் கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சை நிலையத்துக்கு சென்ற முஸ்லிம் மாணவிகளை பர்தாவை கழற்றிவிட்டு வருமாறு தெரிவிக்கப்பட்ட சம்பவம் குறித்து நடவடிக்கை மேற்கொள்வதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கு செய்தியாளர் மாநாடு நேற்று பாராளுமன்ற கட்டடதொகுதியில் நடைபெற்றது.
முள்ளிப்பொத்தானை பரீட்சை மண்டபத்pல் நேற்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார் இதன்போது அமைச்சர் இந்தவிடயத்தை குறிப்பிட்டார்.
இந்த மாகாநாட்டில் கலந்துகொண்ட பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான இதுதொடர்பாக தெரிவிக்கையில்.இவ்வாறான உடைகளை அணிந்துகொண்டு பரீட்சை முறைகேடுகளில் ஈடுபட்ட சம்பவங்களும் உண்டு. இதனால் இதுதொடர்பில் கவனம் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
Related posts:
இலங்கைப் போக்குவரத்தில் கடுமையாக்கப்படவுள்ள சட்டங்கள்!
ஊர்காவற்துறை வாக்குகள் முதலில் எண்ணப்படும் - தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ்!
அனைத்து பல்கலைக்கழகங்களையும் முழுமையாக ஆரம்பிப்பது சாத்தியமில்லை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவ...
|
|