வாக்குறுதி எழுத்து மூலம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் -துறைமுக ஊழியர்!
Monday, December 12th, 2016தமக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எழுத்து மூலம் வாக்குறுதி அளிக்கும் வரை எதிர்ப்பு நடவடிக்கைகளை கைவிடப் போவதில்லை என, ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும், இதுவரை ஏற்றுக் கொள்ளத்தக்க பதில் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, துறைமுக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை கலைக்க கடற்படை தலையிட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என, பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவ அதிகாரி நியமனம்!
முட்டை விலை அதிகரிப்பு - நிர்ணய விலையொன்றை அறிவிக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரிகள் உற்பத்தியாளர்கள...
முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் – குடிவரவு மற்றும் குடியகல...
|
|