ஊடகவியலாளர்களைத் தவிர வேறு எவரும் கணக்கெடுப்பதில்லை – பன்னங்கண்டி –மக்கள் கவலை!

Monday, April 17th, 2017

எமது பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களைத் தவிர வேறு எவரும் தம்மை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்று பன்னங்கண்டி – சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கவனிப்பாரற்ற நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமது எதிர்காலம் என்ன என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நிரந்தர காணி உரிமையுடன் கூடிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி, சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் முன்னெடுத்துவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 26 ஆவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் யுத்தம் காரணமாக கல்வியைத் தொலைத்த தாம், அதிலிருந்து மீண்டெழுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தாருங்கள் என்று சரஸ்வதிகுடியிருப்பு பகுதியில் வசித்துவரும் பாடசாலை மாணவி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காணிகளற்ற காரணத்தால் எவ்வித அடிப்படை வசதிகளும் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டுவரும் தமக்கு, தீர்வைப் பெற்றுத்தருவதற்கு எவரும் முன்வராமை ஏன் என்று பெண் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts: