மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு அதிபர்கள் ஆசிரியர்கள் கறுப்புப் பட்டி போராட்டம்!
Wednesday, March 13th, 2019மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாண அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று (13) கறுப்புப் பட்டி போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், தரம் III புதிய அதிபர் சங்கம் ஆகியவை இணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
வடமாகாணத்தில் உள்ள ஒவ்வொரு பாடசாலை வாயில் இன்று காலை (13) 8 மணிமுதல் சுமார் 30 நிமிடங்கள் கறுப்புப் பட்டி அணிந்து, மௌன போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
போராட்டத்தின் போது, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை உயர்த்துதல், ஆசிரியர்கள் மீது செலுத்தப்படும் தேவையற்ற நெரூக்கீடுகளை அகற்ற வேண்டும். மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6 வீதம் ஒதுக்குதல் போன்ற மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அத்துடன், நேற்றைய தினம் பாடசாலை நிறைவடையும் வரை வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கறுப்பு பட்டி அணிந்து தமது கடமைகளை முன்னெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|