பரீட்சையில் முறைகேடு – 119 மாணவர்களின் முடிவுகள் இடைநிறுத்தம்!
Monday, December 31st, 20182018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்கு தோற்றிய 119 மாணவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடாது ஒத்திவைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பல்வேறு காரணங்களுக்காகவே குறித்த மாணவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடாது ஒத்திவைத்துள்ளதாவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றியிருந்தனர்.
பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் இம்முறை 167,907 பேர் பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வடபகுதியில் பயிர்செய் நிலங்களில்வளர்ந்துள்ளபாத்தீனியச் செடிகளால் விவசாயிகளும்,கால்நடைவளர்ப்போரும் பா...
இலங்கையர்கள் வெளியேற கால அவகாசம்!
யாழ். பல்கலை மாணவிகள் இருவருக்கு இடையில் மோதல்!
|
|