பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் சேவையில் இணைந்துள்ளனர் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டு!

Tuesday, October 3rd, 2023

தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையில் உள்ள பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் சேவையில் இணைந்தவர்கள் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், சுமார் 70 விகிதமான ஊழியர்கள் திறமையற்றவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல துறைகளில் ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் இருந்தாலும் சில துறைகளில் ஊழியர்கள் அதிகளவில் இருப்பதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஆகவே புதிதாக ஊழியர்களை நியமிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: