பயிர்களுக்குப் பீடைநாசினி விசிறினால் 14 நாள்களின் பின்னரே அறுவடை செய்ய வேண்டும் – சுகாதாரப் பகுதியினர் அறிவித்தல்!
Thursday, December 27th, 2018உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளுக்குப் பீடைநாசினிகள் விசிறப்பட்டு ஆகக்குறைந்தது 14 நாள்களின் பின்னரே அறுவடை செய்யப்பட வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு ஒன்று சுகாதாரப் பிரிவு பிறப்பித்துள்ளது.
அதற்கு முன்னர் அறுவடை செய்யப்படின் அவற்றிலுள்ள பீடைநாசினியின் தன்மை பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. சந்தைகளில் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் மரக்கறி வகைகளில் பீடைநாசினிகளின் மணம் காணப்படின் உடனடியாக சுகாதாரத் திணைக்களத்தினருக்கு அறிவிக்குமாறு சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணியகத்தினர் அறிவித்துள்ளனர்.
Related posts:
அனலைதீவு போக்குவரத்து சேவையை இடைநிறுத்தியது இலங்கை போக்குவரத்து சபை - பொதுமக்கள் பெரும் பாதிப்பு!
சுகாதார விதிமுறைகள் அமுல்படுத்தப்படாவிட்டால் மீண்டும் கொரோனா தொற்று பரவக்கூடும் - வைத்தியர் அனில் ஜா...
நெருக்கடி நேரத்தில் சீனாவை விட இந்தியாவே அதிகம் உதவியுள்ளது - எரிபொருள் - எரிவாயுவுக்கு அவசியமான டொல...
|
|