பசுமையான நகரமாக யாழ் நகரத்தை மாற்றுவேன்-  வடக்கின் ஆளுநர்!

Friday, October 26th, 2018

யாழ்ப்பாண நகரத்தை பசுமையான நகரமாக மாற்றுவதே தனது நோக்கமாகும் என வட மாமகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே யாழ் உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலய மைதானத்தில் 24-10-2018 அன்று இடம்பெற்ற மரம் நடுகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார்

ஆளுநர் அங்கு மேலும் உரையாற்றுகையில் யாழ்ப்பாண நகரத்தை பசுமையான நகரமாக மாற்றுவதே எனது நோக்கம். கடந்த மாதம் 4000 மரக்கன்றுகளை பண்ணை பகுதியிலும், யாழ் நகர பாடசாலை பகுதியிலும் நாட்டியிருந்தேன். அதேபோன்று வட மாகாணம் யாழ்ப்பாணத்திலும் மரக்கன்றுகளை நாட்ட திட்டமிட்டிருக்கின்றேன்.

இதபோன்ற செயற்பாடுகளில் ஆர்வம் கொண்ட நிறுவனங்களையும் சமூகப் பிரதிநிதிகளையும் இணைத்து அவர்களுடன் இணைந்து செயலாற்ற எண்ணியுள்ளேன்.

Related posts: