யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவர் உட்பட இருவருக்கு தொற்று – நெருக்கமாகப் பணியாற்றிவர்களையும் சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை!

Monday, May 24th, 2021

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருக்கும் மருத்துவ ஆய்வுகூட பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

விடுதி இலக்கம் 02 இல் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிவர்களை சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை  தகவல்கள் தெரிவித்தன.

Related posts: