நீதி அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக வேறு தரப்பினரினால் மேற்கொள்ளப்படுகின்ற அறிக்கைகள் அதிகார பூர்வமானது அல்ல – நீதி அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 6th, 2021

கொரோனா தொற்று பரவல் காரணமாக நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக எடுக்கப்படுகின்ற ஏதேனும் தீர்மானங்களை மக்களுக்கு அறிவிக்கும் செயற்பாடு, நீதிச்சேவை ஆணைக்குழுவின் மூலம் அல்லது இந்த ஆணைக்குழுவின் அனுமதியுடன் நீதி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கொரோனா பரவல் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக அல்லது நீதி அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக வேறு தரப்பினரினால் மேற்கொள்ளப்படுகின்ற அறிக்கைகள் அதிகார பூர்வமானது அல்ல என்பதுடன், கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் கீழே குறிப்பிட்டுள்ள நீதிச்சேவை ஆணைக்குழுவின் அல்லது உயர் நீதிமன்றத்தின் இணையத்தளத்தின் ஊடாக அறிவிக்கப்படும் என்றும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: