நீரினால் மூடப்பட்ட கொத்மலை மொறபே நகரப்பகுதி மீண்டும் மக்கள் பார்வைக்கு!
Thursday, March 31st, 2016
கடந்த காலங்களில் மலையகத்தில் நிலவி வந்த வரட்சியான காலநிலை காரணமாக கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளது.
இதனால் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீரில் அமிழ்ந்துள்ள (மொறபே பழைய நகரில்) பௌத்த விகாரை ஒன்று 25 வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் வெளித் தெரிகிறது.
இதனால் நீரில் மூழ்கிய பௌத்த விகாரை மற்றும் பழைய நகரம், கிராமம் மீண்டும் மக்களின் கண்களுக்கு தெரிகின்றது.
இதனை பார்வையிட பல பகுதிகளிலும் இருந்து மக்கள் படையெடுத்து வருகின்றனர். அத்தோடு வழிபாடுகளில் ஈடுப்பட்டு செல்கின்றமையையும் காணக்கூடியதாக உள்ளது.
கொத்மலை மொறபே பழைய நகரில் இருந்த பௌத்த விகாரை உட்பட கிராமம் கொத்மலை நீர்தேக்கம் ஆரம்பிக்கும் போது, நீரினால் மூடப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.

Related posts:
யாழ். குடாநாட்டில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சேத விபரங்கள் திரட்டப்படுகின்றது
மிருக வதையை கட்டுப்படுத்த கட்டளைச் சட்டத்தில் திருத்தம் - வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்ச...
கடற்றொழில்துறையுடன் தொடர்புடைய தொழில் வாய்ப்புக்காக பயிற்சி பெற்ற 120 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்ற...
|
|
|


