நாளை தேர்தல்கள் ஆணைக்குழு – கட்சிகளின் செயலாளர்கள் இடையே விசேட சந்திப்பு!

Friday, May 1st, 2020

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (2) முற்பகல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் பொதுச்செயலாளரின் காரியாலயத்தில் இடம்பெறவுள்ள குறித்த சந்திப்பின்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஒரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் மாத்திரம் பங்குபற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: