நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஜனவரி மாதமளவில் குறைவடையும் – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நம்பிக்கை!
Tuesday, December 13th, 2022நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைவடையக்கூடும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
27 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் நேற்று முன்தினம் (11) கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
சீனாவினால் இலங்கைக்கு வழங்கக்கடும் சுகாதார ஒத்துழைப்புகளின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைத்துள்ளன.
இதனிடையே, 42 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம்!
சவால்களுக்கு மத்தியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணமிது. - சுதந்திர தின வாழ்த்துச்...
திரைமறைவில் நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சிகள் தவிடுபொடியாகும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
|
|