மின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை – மின்வலு அமைச்சு!

Saturday, April 28th, 2018

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையில் மின்சாரத்தினை சிக்கனமாகப் பாவிக்குமாறு மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு ஒன்றினை முன்வைத்துள்ளது.

தற்போது நீரேந்து பகுதிகளிலும், நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் 48% வரை வீழ்ச்சியடைந்துள்ளதால், நீர் மின் உற்பத்தி வலு 20% வரை காணப்படுகிறது.

இந்நிலையில் நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் 3 சக்தி பிறப்பாக்கி இயந்திரங்களும் உச்ச அளவில் இயங்கி வருகின்ற நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சுபொதுமக்களை கேட்டுள்ளது.

Related posts: