பல்கலை மாணவர்கள் பயங்கரவாதிகளைப் போன்று நடந்தனராம் – மஹிந்த அமரவீர!

Saturday, June 24th, 2017

பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதிகளைப் போன்று நடந்து கொண்டனர் என மீன்பிடித்துறை நீரியல் வள மற்றும் மஹாவலி அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மஹாவலி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு பல்வேறு சங்கங்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடாத்த பொருத்தமான தனியிடமொன்றை அரசாங்கம் ஒதுக்க வேண்டும். அண்மையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் நடந்து கொண்ட விதம் பயங்கரவாதிகளைப் போன்றது. பெற்றோர் இந்தப் பிள்ளைகளை பல்வேறு எதிர்பார்ப்புக்களுடனேயே பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கின்றனர்.ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் தேவைக்கு ஏற்ற வகையில் ஏன் பல்கலைக்கழக மாணவர்கள் செயற்படுகின்றனர்? இந்த அரசாங்கமும் சில விடயங்களில் காலம் தாமதித்தே தீர்மானம் எடுக்கின்றது. எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தனியான இடமொன்றை ஒதுக்க வேண்டும். மேலும், இல்லையெனில் அரசாங்கத்தை முன்னோக்கி நகர்த்தப்பட முடியாது என மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Related posts: