வடக்கு கடலில் பேருந்துகளை இறக்கும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுங்கள் – அரசாங்கத்திடம் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் கோரிக்கை!

Thursday, June 17th, 2021

தங்களுடைய கோரிக்கையின்படியே வடகடலில் பேருந்துகள் இறக்கப்பட்டதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தது. இதன்போதே குறித்த சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இனிவரும் காலங்களிலும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: