நாட்டில் சீரற்ற காலநிலையால் 92 பேர் பலி!

Monday, May 23rd, 2016

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் இன்றுவரை 92 பேர் உயிரிழந்துள்ளதுடன், 109க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்என அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் 71 ஆயிரத்து 97 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 88 ஆயிரத்து 768 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 933 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் காற்றினால் 506 வீடுகள் முழுமையாகவும் 3 ஆயிரத்து 995 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலையம்  மேலம் தெரிவித்துள்ளது.

Related posts: