நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்க நடவடிக்கை – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குப்பத்திரம் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் இதனூடாக வழங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் எழுத்து மூலமாக இதுவரை வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் வீண் பணச்செலவு ஏற்படுவதுடன் நேரமும் வீண் விரயமாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேசையில் இத்தகைய ஆவணங்கள் குவிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் ஏனைய நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று இந்தியாவின் 70வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கோலாகலம்!
கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள விஷேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
மக்களுக்கான நிவாரணங்கள் விரைவில் வழங்கப்படும் - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|