நல்லூர் துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் பாடுகாயமடைந்த பொலிஸார் ஒருவர் பலி!
Sunday, July 23rd, 2017
நல்லூரில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலின் போது காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மரணமடைந்தார்
யாழப்பாணம் பொலிஸார் இதனை உறுதி செய்துள்ளனர்.நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த தாக்குதலில் நீதிபதி இளஞ்செழியனின் இரண்டு மெய்ப் பாதுகாவலர்கள் காயமடைந்தனர்.
இவர்கள் இருவரும் யாழப்பாணம் போதனாமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இதேவேளை, தம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலானது நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகம் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்தவமனையில் வைத்து கருத்து தெரிவித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
தாதியர் சேவையில் ஏராளம் பிரச்சினைகள்!
இலங்கையின் பணவீக்க நிலமை வீழ்ச்சி!
வாக்காளர் இடாப்பின் 2 ஆம் கட்டப் பணிகள் ஆரம்பம்!
|
|
|


