பொலிஸார் அதிரடி – 1400 க்கும் மேற்பட்ட சாரதிகள் கைது!
Friday, December 21st, 2018பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மதுபோதையுடன் வாகனத்தை செலுத்திய 1400 க்கும் அதிகமான சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில். மதுபோதையுடன் கைது செய்யப்பட்ட சாரதிகளின் எண்ணிக்கை அதிகம் என வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில், வாகன போக்குவரத்து தொடர்பில், சாரதிகளிடமிருந்து 2 ஆயிரத்து 505 மில்லியன் ரூபா அபராத பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
Related posts:
தமிழர்களுக்குத் தீர்வு வழங்க ராஜபக்சக்கள் தயாராகவே இருந்தார்கள் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே பின...
நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் – சுகாதார அமைச்சர் ஹெகலிய அறிவிப்பு!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது செயற்பாட்டுகளின் முன்னேற்றத்தை ஆறு மாதங்களுக்குள் காட்ட முடியாவிட்டால் ஊ...
|
|