வட்டுக்கோட்டையில் முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

Thursday, February 15th, 2024

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை (15) காலை இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிக வேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


சயதொழிலுக்கான உதவிகளை மேற்கொண்டு தருமாறு நிதா கோகுலம் பெண்கள்நலன்புரி நிலையம் அமைப்பு ஈழ மக்கள் ஜனநா...
கலைந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு - தனி வழியில் தமிழரசுக் கட்சி - பங்காளிகளும் புதிய கூட்டு!
மூன்று மாதங்களில் 108 பில்லியன் வருமானம் - தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்...