நலன்புரி நிலைய குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

Wednesday, March 15th, 2017

கீரிமலை பகுதியில் ‘நல்லிணக்கபுரம்’ வீட்டுத்திட்டத்தில் மேலும் 33 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

‘நல்லிணக்கபுரம்’ சமூக சேவை நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது உள்நாட்டினுள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் 33 பயனாளிகளுக்கு புதிய வீடுகளுக்கான உறுதிப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டது.

குறித்த வீட்டுத்திட்ட நிர்மாணப்பணிகள் கூட்டு செயற்திட்ட முகாமை குழு, முப்படை வீரர்கள் மற்றும் பயனாளிகளின் சமூக உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் கூட்டு முயற்சியினால் முன்னெடுக்கப்பட்டதாகும்.

நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீடும் 20 பேச்சஸ் நிலப்பரப்பில் சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதி கொண்டதாக காணப்படுவதுடன் இரண்டு படுக்கையறைகள், நீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ளது. அத்துடன் பொதுவசதிகளான வீதிகள், விளையாட்டு மைதானம், முன்பள்ளி, சமூக சேவை நிலையம், தூய குடி நீர் விநியோகிப்பதற்கான சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல பொது வசதிகளையும் கொண்டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட செயலாளர், யாழ் பாதுகாப்பு படை கட்டளைத்தளபதி, அரச உயர் அதிகாரிகள், மற்றும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts: