பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிக தடை – ரஷ்யா அதிரடி அறிவிப்பு!
Friday, September 22nd, 2023பெட்ரோல், டீசல் ஆகியவற்றினை ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் ஊக்கமின்மைக்கு நிரந்தர வரிக் கொள்கை இல்லாமையே காரணம் எனவும், அத்துடன் நாட்டின் பொருட்களிற்கான விலை ஏற்றத்தினை குறைப்பதற்காக இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதன் காரணமாக ரஷ்யாவில் உள்நாட்டில் எரிபொருளின் விலை 4 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நயினாதீவு அம்மன் ஆலயம் தொடர்பில் விஷேட கூட்டம்!
மின்சார விபத்து : இருவர் படுகாயம் - நல்லூரில் சம்பவம்!
வைத்தியசாலைக்கு வருவோர் தடுப்பூசி அட்டையை கொண்டுவருவது – யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர்...
|
|