நடமாடும் வாகனங்களில் தேங்காய் விற்பனை!
Friday, September 29th, 2017திங்கட்கிழமைமுதல் நடமாடும் வாகனங்களை பயன்படுத்தி தேங்காயை விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெங்கு உற்பத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பிலான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். தேங்காய் விலை அதிகரிப்பு பற்றி உடனடியாக கவனம் செலுத்துமாறு இதன்போது ஜனாதிபதி தெங்கு உற்பத்தி அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கினார்.
Related posts:
பிலிப்பைன்ஸ் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி - இராணுவ தளபதி சந்திப்பு!
நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை: 3 ஆயிரதத்திற்கும் அதிகமானோர்கைது - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெ...
நிதி அமைச்சர் பசிலின் இந்தியாவுக்கான பயணம் இலங்கைக்கு முக்கியமானதாக அமையும் - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்...
|
|